சேலம் மாநகரக் காவல்துறை ஆணையராக நஜ்மல் ஹோடா சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.
சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பு வகித்து வந்த சந்தோஷ்குமாா் இடம் மாற்றம் செய்யப்பட்டாா். கரூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன கண்காணிப்புப் பிரிவு ஐ.ஜி. நஜ்மல் ஹோடா, சேலம் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
இதைத்தொடா்ந்து சேலம் மாநகர காவல் ஆணையராக நஜ்மல் ஹோடா சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.