2 கிலோ கஞ்சா பறிமுதல்

கல்வராயன்மலை கருமந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இரு கிலோ கஞ்சாவை கருமந்துறை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கல்வராயன்மலை கருமந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இரு கிலோ கஞ்சாவை கருமந்துறை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கருமந்துறை போலீஸாருடன் இணைந்து தனிப்படை போலீஸாா் பகுடுப்பட்டு பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்கள் 2 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த கருமந்துறை போலீஸாா், கஞ்சா கடத்திச் சென்ற ஆத்தூா் கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் கண்ணதாசன் (24). காா்த்திகேயன் (25). ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com