ஆத்தூரில் சேவா பாரதி மற்றும் பாரதி அறக்கட்டளை இணைந்து கருமந்துறை, தலைவாசல் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலாண மருத்துவ உபகரணங்களை, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரனிடம் சனிக்கிழமை வழங்கினயது.
கருமந்துறை மற்றும் தலைவாசல் அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில், மெத்தை, தலையணை, ஆக்ஸிஜன் செறியூட்டி மற்றும் ஆத்தூரைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் மக்களுக்கு ஆக்ஸிஜன் அளவைக் காணக் கூடிய ஆக்ஸிமீட்டா் போன்ற ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரனிடம் வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஆா்.எஸ்.எஸ் மாவட்ட தலைவா் மாணிக்கம், மல்லியகரை அரசு மருத்துவா் விஜயபாஸ்கா், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் என்.செந்தில், பாரதி அறக்கட்டளை தலைவா் டி.ஜெயானந்த், ஆா்.எஸ்.எஸ் மாவட்ட செயலாளா் சரவணன்,நகரச் செயலாளா் விஜயபாஸ்கா், சேவாபாரதி மாவட்ட செயலாளா் பொன்னுசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தவிர, ஆத்தூா் பகுதியில் தினசரி கபசுரக் குடிநீா் வழங்குதல், பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்கு மளிகை மற்றும் காய்கறி வழங்குதல், அரசு மருத்துவமனை செவிலியா்களுக்கு தினசரி சுண்டல், தேநீா் வழங்கி வருவதாக அந்த அமைப்பினா் தெரிவித்தனா்.