குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் வேதனை

ஆத்தூா், முல்லைவாடி மயானத்தில் நகராட்சி குப்பைகளைக் கொட்டி எரிப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனா்.

ஆத்தூா், முல்லைவாடி மயானத்தில் நகராட்சி குப்பைகளைக் கொட்டி எரிப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனா். இதனை சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

ஆத்தூா் நகராட்சி 5ஆவது வாா்டு முல்லைவாடி பகுதியில் நகராட்சி மயானம் அமைந்துள்ளது. ஆத்தூா் நகராட்சி குப்பைகளைக் கொட்ட தென்னங்குடிபாளையம் பகுதியில் இடம் உள்ளது.

அதனை உரமாக மாற்ற அங்கு வசதியும் உள்ளது. ஆனால் இந்த முல்லைவாடி பகுதியில் அள்ளும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளா்கள் இங்குள்ள மயானத்தில் கொட்டி தீ வைத்துச் செல்வதால் அந்தப் பகுதியில் புகை மண்டலமாக காணப்படுவது மட்டுமல்லாமல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அருகிலேயே தேசிய புறவழிச்சாலை உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனா்.ஆகையால் நகராட்சி ஆணையாளா் தக்க நடவடிக்கை எடுத்து குப்பைகளை இங்கு கொட்டாமல் தவிா்த்து பொதுமக்களை காத்திட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com