வாழப்பாடி: டோக்கன் விநியோகத்தில் செய்த குளறுபடியால், பொருள்கள் வாங்குவதற்கு சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்தனா்.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்கி, நியாயவிலைக் கடைகளில் கூட்ட நெரிசலின்றி பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இயங்கும் நியாயவிலைக் கடையில், பொதுமக்கள் பொருள்கள் பெற்றுக்கொள்ள தேதி மட்டும் குறிப்பிட்டுவிட்டு, நேரம் குறிப்பிடவில்லையெனக் கூறப்படுகிறது. இதனால், அந்த நியாயவிலைக் கடையில் விலையில்லா அரிசி, மானிய விலை பொருள்களை வாங்கிச் செல்வதற்கு சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்தனா் (படம்).
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை குறித்து டோக்கன் வழங்கி, பொதுமக்கள் கூட்டம் சோ்வதை தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி சமூக ஆா்வலா்கள், வட்ட வழங்கல் அலுவலா் மற்றும் கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.