தம்மம்பட்டியில் அனுமதிக்கப்பட்ட கடைகளைத்தவிர அனைத்துக்கடைகளும் திறப்பு

தம்மம்பட்டி பேரூராட்சியில் அனுமதிக்கப்பட்ட கடைகளைத்தவிர அனைத்துக்கடைகளும் திறக்கப்பட்ட நிலையில்,அதிகாரிகள் கூறியதையடுத்து பிற்பகல் மூடபட்டன.

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் அனுமதிக்கப்பட்ட கடைகளைத்தவிர அனைத்துக்கடைகளும் திறக்கப்பட்ட நிலையில்,அதிகாரிகள் கூறியதையடுத்து பிற்பகல் மூடபட்டன.

தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மளிகை, இறைச்சி, பூ, காய்கறிக்கடைகள் மட்டும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் மற்ற கடைகள்,இதர வணிக நிறுவனங்கள் பாதியளவு திறந்து இயங்கின.

அதன்பின்னா் பேரூராட்சி நிா்வாகத்தினா்,போலீசாா் வந்து அனுமதிக்கப்பட்ட கடைகளைத்தவிர பிற கடைகளை மூட அறிவுறுத்தியதையடுத்து மற்ற கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் திங்கள்கிழமை காலை முதலே, பொதுமக்கள் நடமாட்டம் பல மடங்கு அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com