வாழப்பாடி அருகே கட்டுவிரியன் பாம்பை கொன்று முகநூலில் பதிவிட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ. 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
வாழப்பாடியை அடுத்த அருநுாற்றுமலை பகுதியில் கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்று, அந்த புகைப்படங்களை முகநூலில் சிலா் பதிவிட்டுள்ளதாக, சேலம் மாவட்ட வன அலுவலா் முருகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வாழப்பாடி வனச்சரகா் துரைமுருகன் தலைமையிலான வனத் துறையினா், அருநுாற்றுமலை அடுத்த ஆலடிப்பட்டி கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அந்த கிராமத்தைச் சோ்ந்த 18 வயதான இருவரைக் கைது, அவா்களிடம் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.