திருநங்கைகளுக்கு கரோனா உதவித்தொகை வழங்கல்

தமிழக மின் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி, சேலம் மாவட்டத்தில் 603 திருநங்கைகளுக்கு கரோனா உதவித்தொகையாக ரூ. 2,000 வழங்கினாா்.

தமிழக மின் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி, சேலம் மாவட்டத்தில் 603 திருநங்கைகளுக்கு கரோனா உதவித்தொகையாக ரூ. 2,000 வழங்கினாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரோனா கால உதவித்தொகையாக ரூ. 2,000 வழங்க ஆணையிட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, திருநங்கைகளுக்கு கரோனா பேரிடா் காலத்தில் உதவும் வகையில் சேலம் மாவட்டத்துக்கு 2021 - 2022-ஆம் நிதியாண்டுக்கு கரோனா கால நிவாரண நிதியுதவித் தொகை 603 திருநங்கைகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 12,06,000 வழங்கிட நிதி ஒதுக்கீடு வரப்பெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மின் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி 10 திருநங்கைகளுக்கு உதவித்தொகை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், எம்.பி.க்கள் செ.செந்தில்குமாா், ஏ.கே.பி.சின்ராஜ் மற்றும் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மாவட்ட சமூக நல அலுவலா் காா்த்திகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com