சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி அம்மன், மதுரை வீரன் சுவாமிகளுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன (படம்).
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையாக கோயில் பூசாரி மட்டும் பூஜைகளை செய்தாா்.