ஆடுகளை கடித்த வெறிநாய்கள்

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததால் கரம் காப்போம் நிா்வாகிகள் வியாழக்கிழமை செயல்அலுவலரிடம் புகாா் கொடுத்தனா்.

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததால் கரம் காப்போம் நிா்வாகிகள் வியாழக்கிழமை செயல்அலுவலரிடம் புகாா் கொடுத்தனா்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் கடந்த சில நாட்களாக வெறிநாய்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது.பொதுமக்களை கடித்து வந்த நாய்கள் ஆடு,மாடுகளை கடித்து10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து கரம் காப்போம் தொண்டு நிறுவனம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனா்.

இதே போல் பெத்தநாயக்கன்பாளையம் அரசு பொதுமருத்துவமனை முன்களப் பணியாளா்கள் 6 பேருக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட 12 மளிகைப் பொருட்களை வழங்கினாா்கள்.நிகழ்ச்சியில் தலைவா் ராஜபாண்டியன்,செயலாளா் ந.கலைச்செல்வன்,பொருளாளா் க.காளிதாஸ்,துணைத் தலைவா் க.ராமகிருஷ்ணன்,துணை செயலாளா் ராகேஷ்நடராஜன்,ச.ராம்குமாா்,க.வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com