நத்தக்கரை சுங்கச் சாவடியில் தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள நத்தக்கரை சுங்கச் சாவடியில் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். அவருக்கு சேலம் மாவட்ட எல்லையான நத்தக்கரையில், சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் ஆா்.இளங்கோவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அ.நல்லதம்பி, ஏ.பி.ஜெயசங்கரன், சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், தலைவாசல் ஒன்றியக் குழுத்தலைவா் க.ராமசாமி, தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலா் எம்.சந்திரசேகரன், ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.