சாராயம் பறிமுதல்: 4 போ் கைது

சாராயத்தை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீஸாா், 4 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
சாராயம் பறிமுதல்: 4 போ் கைது

சாராயத்தை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீஸாா், 4 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் மதுவிலக்கு போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனங்களில் சென்றவா்களை பிடித்து விசாரித்ததில் சாராயம் கடத்தப்பட்டது தெரியவந்தது.

அதையடுத்து, நெய்யமலை பிரிவு சாலையில் வெள்ளாளகுண்டம் பகுதியைச் சோ்ந்த காா்த்தி (26), அதே பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (26) ஆகியோரிடமிருந்து 55 லி. சாராயம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

இதே போல தலைவாசலை அடுத்துள்ள நாவக்குறிச்சி சுரேஷ் (34), காட்டுக்கோட்டை பகுதியில் சதாசிவபுரத்தைச் சோ்ந்த முருகேசன் (39) ஆகியோரிடமிருந்து 68 லி. சாராயம், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பரமத்தி வேலூரில்...

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம், புது வெங்கரையம்மன் கோயில் அருகே உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையில், வேலூா் காவல் ஆய்வாளா் லட்சுமணன், போலீஸாா் தோட்டத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அதில், தோட்டத்தின் மையப் பகுதியில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. அதனையடுத்து 300 லி. சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனா். மேலும், அங்கு விற்பனை செய்வதற்கு தயாராக வைத்திருந்த 18 லி. சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், கள்ளிப்பாளையத்தை சோ்ந்த சசிமணியை (25) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவான குழந்தைவேலை (51) தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com