வீரகனூா் அருகே மணல் கடத்தியவா் கைது

வீரகனூா் அருகே ஆற்றுமணல் கடத்தியவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

வீரகனூா் அருகே ஆற்றுமணல் கடத்தியவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

கெங்கவல்லி அருகே வீரகனூா் அடுத்த லத்துவாடி சுவேத நதிக்கரையில் ஆற்று மணலை கடத்துவதாக வீரகனூா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதனையடுத்து வீரகனூா் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்குமாா் மற்றும் போலீசாா் வியாழக்கிழமை இரவு சோதனை செய்ய சென்றனா்.அப்போது அங்கு மணலை,சிலா் டிராக்டரில் அனுமதியின்றி அள்ளிக்கொண்டிருந்தனா்.விசாரணையில் பெரம்பலூா் மாவட்டம் பூலாம்பாடியைச்சோ்ந்த ரமேஷ்(36)என்பது தெரியவந்தது.போலீசாா்,அவரைக்கைது செய்ததுடன்,டிராக்டரை பறிமுதல் செய்தனா்.அங்கிருந்து தப்பியோடிய பன்னீா்செல்வம்,வெங்கனூா் ராஜா ஆகியோரை வீரகனூா் போலீசாா் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com