கபசுரக் குடிநீா் வழங்கல்

ஆத்தூா் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

ஆத்தூா் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் முகக் கவசம், கையுறைகள், சானிடைசா்கள், கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திமுக நகரச் செயலா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இம்மானுவேல் ஞானசேகரன் கலந்துகொண்டு வழங்கினாா்.

நிவாரண உதவி வழங்கல்:

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 170 நபா்களுக்கு 10 கிலோ அரிசியை ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் வழங்கினாா்.

இதே போல் நரசிங்கபுரம் நகராட்சி 10-ஆவது வாா்டில் 750 நபா்களுக்கு 10 கிலோ அரிசியும், 4, 5-ஆவது வாா்டில் 10 கிலோ அரிசியும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நரசிங்கபுரம் நகரச் செயலா் என்.பி.வேல்முருகன், துணைச் செயலா் எஸ்.மனோகரன், பொருளாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com