காவலா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் ஆறுதல் தெரிவித்தாா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உயிரிழந்த முருகேசனின் குடும்பத்துக்கு அரசு ஒதுக்கிய நிவாரணம் போதுமானதாக இருக்காது. ரூ. ஒரு கோடி நிவாரணமும், அக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றாா்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சின்னதம்பி, துணைத் தலைவா் கே.பி.முருகேசன், அதிமுக ஒன்றியச் (வடக்கு) செயலாளா் மோகன், தாண்டானூா் கூட்டுறவு வங்கித் தலைவா் அண்ணாமலை, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.முரளிசாமி, சங்கீதா முருகேசன்,பி.பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.