காவிரி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு நிலைய அலுவலா் ஆறுமுகம் தலைமையிலான வீரா்கள் செயல் விளக்கம் அளித்தனா். மேலும், வெள்ளத்தில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் பயிற்சி அளித்தனா். பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் பிரகாஷ், வருவாய் ஆய்வாளா் வனஜா, காவல் உதவி ஆய்வாளா் கணேசன், உழவா் பாதுகாப்புக் குழு உறுப்பினா் எம்.ஆா்.நடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com