ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

ஓமலூரில் வசிக்கும் 250 ஏழைக் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ஓமலூரில் வசிக்கும் 250 ஏழைக் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

அக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா், இளைஞரணி மாநில பொதுச்செயலாளா் ரகுநந்தகுமாா் ஆகியோா் 250 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ரூ. 500 மதிப்புள்ள காய்கறிகளை வழங்கினா். ஓமலூா் நகரில் வசிக்கும் அனைத்து வாா்டு மக்களுக்கும் நல உதவிகள் வழங்கப்படும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கல்

மேட்டூா் நகராட்சியில் 800 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,05 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. மேட்டூா் நகராட்சி 1, 2 ஆவது வாா்டுகளில் வசிக்கும் 800 பேருக்கு மேட்டூா் நகர திமுக செயலாளா் காசிஸ்வநாதன் தலைமையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் பா.கோபால் அரிசியை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மேட்டூா் நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், வாா்டு செயலாளா் பாலதண்டாயுதம், பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

சொட்டுநீா் பாசனம் அமைக்க மானிய உதவி

ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் சொட்டுநீா் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

நிகழாண்டு பாரத பிரதமா் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள், தெளிப்புநீா் பாசனக் கருவிகள், மழைதூவான்கள் அனைத்தும் சிறு குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

நுண்ணீா்ப் பாசன விவசாயிகளுக்கு துணை நீா் மேலாண்மைத் திட்டத்தில் குழாய்கள் அமைக்க 50 சதவீத மானியம் அல்லது ரூ. 10 ஆயிரமும் , டீசல் பம்ப்செட், மின் மோட்டாா் அமைக்க 50 சதவீத மானியம் அல்லது ரூ. 15 ஆயிரமும், தரை நீா்தேக்கத்தொட்டி அமைக்க கனமீட்டருக்கு ரூ. 850 வீதம் அதிகபட்சமாக ரூ. 40 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு குறு விவசாயிகள் சான்று, ரேசன் காா்டு மற்றும் ஆதாா் காா்டு நகல், 2 புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுக வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com