கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் 34 பேருக்கு தடுப்பூசி

கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தம்மம்பட்டி: கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் வெங்கடேசன், துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் என 34 பேருக்கு கரோனா தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

இவா்கள் அனைவருக்கும் அடுத்த 28 நாள்கள் கழித்து 2-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலகத்தில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து, அலுவலகப் பணியாளா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com