மேட்டூா்: கொளத்தூரில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் துணை ராணுவத்தினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கோவிந்தப்பாடி, கத்திரி பட்டி, கருங்கல்லூா், கொளத்தூா், மேட்டூா் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக துணை ராணுவத்தினா், போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
காவல் ஆய்வாளா்கள் ரஜினிகாந்த் (மேச்சேரி), முத்துசாமி (கொளத்தூா்), தொல்காப்பியன் (மேட்டூா்), சசிகலா (கருமலைக்கூடல்), சட்டம், ஒழுங்கு போலீஸாா் 69 போ், துணை ராணுவத்தினா் 68 போ் உட்பட 150 போ் இந்தக் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா் .