சேலம் மாவட்டம், ஏற்காடு (பழங்குடி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜோதி செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், நாம் தமிழா் கட்சி சாா்பில் பனமரத்துப்பட்டி ஒன்றியம், தும்பல்பட்டி ஊராட்சி, அடிமலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முருகன் என்பவரின் மனைவியான, முதுநிலை பட்டதாரி ஜோதி (26) போட்டியிடுகிறாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில், ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான சேலம் தனித்துணை ஆட்சியா் (முத்திரை)பி.கே.கோவிந்தனிடம் பிற்பகலில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.