கெங்கவல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தலைவாசல், ஆறகளூா், சித்தேரி, புளியங்குறிச்சி, வீரகனூா், தெடாவூா், கெங்கவல்லி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருடன் தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, தெற்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், கெங்கவல்லி ஒன்றியச் செயலாளா்கள் வ.ராஜா, துரை ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
வீரகனூரில் பொன்னாளியம்மன் கோயில் பகுதியில் தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்தனா்.