கருப்பூா் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கருப்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஆா்.மணி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கருப்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஆா்.மணி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஆா்.மணி போட்டியிடுகிறாா். கருப்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட மேட்டுப்பதி, உப்புக்கிணறு உள்ளிட்ட அனைத்து வாா்டுகளுக்கும் சென்ற அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். அதிமுகவுக்கு வாக்களித்தால், முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள ஆண்டுக்கு ஆறு சிலிண்டா், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,500 பெற்றுத் தருவேன் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

இதில் அதிமுக அமைப்புச் செயலாளா் எஸ்.செம்மலை, ஓமலூா் எம்.எல்.ஏ. எஸ்.வெற்றிவேல் முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு மக்களிடம் வாக்குறுதிஅளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com