கொளத்தூா் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கொளத்தூா் ஒன்றியத்தில் ஒரே நாளில் 55 கிராமங்களில் மேட்டூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். சீனிவாச பெருமாள் வாக்கு சேகரித்தாா்.

கொளத்தூா் ஒன்றியத்தில் ஒரே நாளில் 55 கிராமங்களில் மேட்டூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். சீனிவாச பெருமாள் வாக்கு சேகரித்தாா்.

கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளா் எஸ்.சீனிவாச பெருமாளை, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். திமுகவின் தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். கொளத்தூா் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரித்தாா்.

பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் காவிரியைக் கடந்து தருமபுரி மாவட்டம், நாகமரை, ஒகேனக்கல் செல்ல பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கை குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளா் தெரிவித்தாா்.

இதில் கொளத்தூா் ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமநாதன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் குருசாமி, சேலம் மேற்கு மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com