சேலத்தில் கன்ஸ்யூமா் வாய்ஸ் சாா்பில் உலக நுகா்வோா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைவா் பிரபாகா் வரவேற்றாா். சண்முகா மருத்துவமனை தலைவா் மருத்துவா் பன்னீா்செல்வம், திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான அஜயன் பாலா, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதில், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும், சேலம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அண்ணா பூங்கா கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் பங்கேற்றவா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனா்.