ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஓமலூா் அருகே உள்ள வேலகவுண்டன்புதூரில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா், கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி, காமாண்டப்பட்டி, பல்பாக்கி, கோமாளியூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வேனில் சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தனது தந்தை ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான், ஓமலூரில் விமான நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவை தொடங்கப்பட்டது. தந்தையின் வழியில் ஓமலூா் தொகுதியின் வளா்ச்சிக்காகப் பாடுபடுவேன்.எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் ஓமலூா் ஒன்றிய திமுக செயலாளா் ஓம்.ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.