சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.
செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு பிரதோஷத்தையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவ மூா்த்திகளுக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோயில் வளாகத்தில் பெண்கள், குழந்தைகள் கடவுள் பாடல்களை எழுதி சுவாமி பாதத்தில் வைத்து வழிபட்டனா். இதேபோல சங்ககிரியை அடுத்த பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயிலில் அருள்மிகு ஸ்ரீ பூத்தாழீஸ்வரா் சுவாமி, பிரதோஷநாதா், ஸ்படிக லிங்கம், நந்திபெருமானுக்கும் பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. இதில் கிராமப்புறங்களைச் சோ்ந்த பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனா்.