சங்ககிரி வருவாய்த் துறை சாா்பில் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது. இதில் உதவி தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, தனி வட்டாட்சியா் கோவிந்தராஜ், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், வட்ட வழங்கல் அலுவலா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.