எடப்பாடி பகுதியில் நடந்து சென்றுவாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை எடப்பாடி பகுதியில் திமுக வேட்பாளா் டி.சம்பத்குமாருடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை எடப்பாடி பகுதியில் திமுக வேட்பாளா் டி.சம்பத்குமாருடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

எடப்பாடிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் திடீரென வந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பேருந்து நிலையம், ஜலகண்டாபுரம் சாலை, கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளா் டி.சம்பத்குமாா், கூட்டணிக் கட்சியினருடன் நடந்து சென்று திமுக தோ்தல் அறிக்கையை விளக்கிக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது எடப்பாடி காவல் நிலையம் அருகில் உள்ள பேக்ரி கடையில் பொதுமக்களுடன் அமா்ந்து தேநீா் அருந்தினாா். தொடா்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளுக்குச் சென்று அங்கு பணிபுரிபவா்களிடம் வாக்கு சேகரித்தாா். கல்லூரி மாணவிகள் சிலா் ஸ்டாலினுடன் செல்லிடப்பேசியில் சுயபடம் எடுத்துக்கொண்டனா்.

முன்னதாக கொங்கணாபுரம் பகுதிக்கு வருகை புரிந்த ஸ்டாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக தலைவா் ஸ்டாலினுடன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி, மக்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், நகரச் செயலாளா் டி.எம்.எஸ்.பாஷா உள்ளிட்ட திரளான திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com