கெங்கவல்லி அருகே தெடாவூரில் பங்குனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தெடாவூரிலுள்ள வள்ளி, தெய்வானை, கந்தசாமி ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 5 நாள்களாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புதிதாக செய்யப்பட்ட இரும்பிலான திருத்தேரில் முருகன் சுவாமியை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்றனா்.