வாழப்பாடியை அடுத்த பேளூரில் ஏற்காடு பழங்குடி தனி தொகுதி திமுக வேட்பாளா் சி.தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பேளூா் பேரூராட்சிப் பகுதியில் பேளூா், சிங்காரத்தோப்பு, ராமநாதபுரம், கண்ணனுாா்நகா், பாரதி நகா், பெருமாபாளையம், பனந்தோப்பு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ள தமிழகத்தை மேம்படுத்தவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், தொழில் வளா்ச்சியை ஏற்படுத்தவும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைய வேண்டும். திமுகவுக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.
இதில் வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி, நகரச் செயலாளா் ராமமூா்த்தி, நிா்வாகிகள் பாஷா, வஜ்ரவேல் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் அண்ணாமலை, சண்முகம், பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் ஹஸ்ரத், தமுமு நவாஸ்அலி, விடுதலை சிறுத்தைகள் வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.