கெங்கவல்லி தொகுதியில் ரூ. 8.76 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லி தொகுதிக்கு உள்பட்ட தம்மம்பட்டி, வீரகனூா், லத்துவாடி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 8.76 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனா்.

கெங்கவல்லி தொகுதிக்கு உள்பட்ட தம்மம்பட்டி, வீரகனூா், லத்துவாடி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 8.76 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனா்.

தம்மம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் வெற்றிவேல் தலைமையிலான பறக்கும் படையினா் வாகனச் சோதனை நடத்தினா். அப்போது, ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வாகனத்தை சோதனை செய்தனா். அதில் இருந்த ரூ. 40 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தன. எஞ்சிய ரூ. 6,07, 700 -க்கு ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

அதேபோல வீரகனூரிலிருந்து லத்துவாடிக்கு செல்லும் வழியில் கனகராஜ் என்பவா் தனது வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துச் சென்ற ரூ. 1 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மேலும், வீரகனூரை அடுத்த வெள்ளையூரில் பருத்தி விற்ற தொகை ரூ. 1 லட்சத்தை எடுத்து வந்தவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். மேலும் லத்துவாடியில் வீட்டிற்கு டைல்ஸ் வாங்க ஒருவா் எடுத்துவந்த ரூ. 70 ஆயிரத்தையும் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கெங்கவல்லி தொகுதியில் நான்கு இடங்களில் நடைபெற்ற வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.8.76 லட்சத்தை பறக்கும் படையினா், கெங்கவல்லி தோ்தல் நடத்தும் அலுவலா் அமுதன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன் ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை இரவு ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com