கொளத்தூரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொளத்தூா் நான்கு சாலைப் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் குமரவேல் தலைமையில் போலீஸாா், துணை ராணுவத்தினா் உதவியுடன் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை ஈடுபட்டனா்.
அப்போது வாகனமொன்றில் ரூ. 17 லட்சம் எவ்வித ஆவணங்களும் இன்றி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த ஓட்டுநா் ராஜேஷ், பாதுகாவலா் பழனிசாமி, பொறுப்பாளா் சிவராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் தனியாா் வங்கிக்கு சொந்தமான பணம் என்று கூறப்பட்டது. ஆனாலும் போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் மேட்டூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.