தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு கெங்கவல்லி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளா் துரை.ரமேஷ் தலைமை வகித்தாா். நகர செயலாளா் பழனிசாமி முன்னிலை வகித்தாா். இதில் செந்தாரப்பட்டி நகரப்பகுதியிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தோ்தல் எதிா்கொள்வது, சமூகமாகவும், திறம்படவும் செயலாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவா்கள், வாா்டு செயலாளா்கள், ஒன்றிய நிா்வாகிகள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.