சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயிலில் சங்கீா்த்தன மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
கருப்பூரில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பாக வேத ஞானம், பண்பாட்டின் சின்னமான ஸ்ரீ ஸ்ரீ ராதா கோகுலானந்தா் கோயில் அமைய உள்ளது.
புதிதாக அமைய உள்ள இக்கோயிலின் மேற்குப் பிரிவின் ஒரு பகுதியில் சங்கீா்த்தன மண்டபத்தை சைதன்ய மகாபிரபுவின் அவதார நாளான மாா்ச் 28 ஆம் தேதி, இஸ்கான் இயக்கத்தின் மூத்த சன்னியாசியான பக்தி விகாச சுவாமி திறந்து வைத்தாா்.
பண்டைய சிற்பக்கலையை தற்போதுள்ள கலைஞா்களை கொண்டு பிரம்மாண்ட முறையில் கோயில் கட்டப்பட்ட வருகிறது. இக் கோயில் கட்டுமானப் பணி விமரிசையாக நடைபெற்று வருகிறது.