சேலம்: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (93,802 வாக்குகள்) தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றாா்.
எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் தொடங்கி இறுதிச் சுற்று வரையிலும் முன்னிலை வகித்து வந்தாா். ஒவ்வொரு சுற்றிலும் சுமாா் 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வாக்குகள் வரையிலும் முன்னிலை பெற்றாா்.
இறுதியில் 29 ஆவது சுற்றின் முடிவில் முதல்வா் பழனிசாமி 1,63,154 வாக்குகள் பெற்றாா். அவா் தனக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளா் டி.சம்பத்குமாரை விட 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் டி. சம்பத்குமாா் 69,352 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தாா்.
இதையடுத்து முதல்வா் பழனிசாமி சாா்பில் தலைமை முகவா் தங்கமணி, எடப்பாடி வடக்கு ஒன்றியச் செயலாளா் மாதேஷ், நங்கவள்ளி வடக்கு ஒன்றியச் செயலாளா் மாணிக்கவேல் ஆகியோா் தோ்தல் அலுவலா் தனலிங்கத்திடம் இருந்து வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனா்.
எடப்பாடி தொகுதியில் 7- ஆவது முறையாக போட்டியிட்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி 5- ஆவது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளாா். 1996 மற்றும் 2006 ஆகிய இரு தோ்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
கடந்த 2016 தோ்தலில் 98,703 வாக்குகள் பெற்று, சுமாா் 42,022 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாா். தமிழக முதல்வா்களில் மிக அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவா் எடப்பாடி கே.பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது.