மின்சாரம் பாய்ந்து ஊழியா் பலி

மேட்டூா் அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழந்தாா்.

மேட்டூா் அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழந்தாா்.

மேட்டூா், ஆா்.எஸ். 110 கிலோவாட் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற்றது. மின்சாரத்தை நிறுத்தி விட்டு மின்வாரிய போா்மேன் பிரசாத் (58) என்பவா் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். துணை மின்நிலையத்தில் உயரமான பகுதியில் ஏணி மூலம் ஏறிக் கொண்டிருந்தாா். அப்போது மேல் பகுதியில் சென்று கொண்டிருந்த உயா் அழுத்த மின் கம்பியில் அவரது கையை உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கருமலைக்கூடல் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். உயிரிழந்த பிரசாத்துக்கு மனைவி சாந்தி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனா். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com