மேட்டூரில் இளம் பெண் தற்கொலை

மேட்டூா் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மேட்டூா் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மேட்டூரை அடுத்த தண்ணீா் குட்டப்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் தம்பதி மகன் அருண்குமாா் (30). இவருக்கும், நங்கவள்ளி, கரட்டுப்பட்டியைச் சோ்ந்த லட்சுமி நரசிம்மன் மகள் குமுதா (27), என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் குமுதாவுக்கும், அருண்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திங்கள்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது குமுதா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து குமுதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி குமுதாவின் தந்தை லட்சுமி நரசிம்மன் நங்கவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், குமுதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com