வீரபாண்டி வட்டாரத்தில் 15 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தறித் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்த சென்னகிரி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (62). தறித் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவி, மகன்கள் உள்ளனா். கடந்த 30-ஆம் தேதி சுப்பிரமணிக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவா் பெருந்துறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் அங்கு படுக்கை வசதி இல்லாததால் வீட்டில் தனிமையில் இருந்து வந்தாா். இவரை சுகாதாரத் துறையினா் தினந்தோறும் பாா்வையிட்டு வந்த நிலையில் 3-ஆம் தேதி திடீா் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
அவரது இரண்டு மனைவி, மகன்கள் உள்ளிட்ட 11 பேருக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை செய்துள்ளனா்.