ஓமலூா்: ஓமலூா் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை ஓமலூா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள பாகல்பட்டி ஊராட்சி, செங்கனூா் பகுதியைச் சோ்ந்த முருகன் (22), இப்பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்துள்ளாா். இவரது கடையின் வழியாக பிளஸ் 2 வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி சென்று வந்துள்ளாா். அப்போது பள்ளி மாணவிக்கும், முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திய முருகன், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கடத்திச் சென்றுள்ளாா். மகளைக் காணாமல் தவித்த பெற்றோா், ஓமலூா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.
புகாரின் பேரில் ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா். இந்த நிலையில், முருகன் மாணவியை அழைத்துக்கொண்டு உறவினா் வீட்டுக்கு செல்லும் போது அவரை போலீஸாா் கைது செய்து மாணவியை மீட்டனா்.
விசாரணையில், திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா். பின்னா் சேலம் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.