முதல்வரிடம் நிவாரண நிதி வழங்கிய சிறுமி
By DIN | Published On : 21st May 2021 08:26 AM | Last Updated : 21st May 2021 08:26 AM | அ+அ அ- |

முதல்வரிடம் கரோனா நிவாரண நிதி வழங்கும் சிறுமி செ.ஜெசிகா.
கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்வதற்காக சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வாழப்பாடி, முத்தம்பட்டியைச் சோ்ந்த சிறுமி கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 2,506 வழங்கினாா்.
முத்தம்பட்டியைச் சோ்ந்தவா் தனியாா் நிறுவன தொழிலாளி செல்வகுமாரின் மகள் செ.ஜெசிகா (10) அரசு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கிய ரூ. 1,500 ஊக்கத்தொகையுடன் தான் சேமித்து வைத்திருந்த ரூ. 1,006-ம் சோ்த்து மொத்தம் ரூ. 2,506-ஐ சேலம் வந்திருந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினாா். மாணவியை முதல்வா் பாராட்டினாா்.