வாழப்பாடி அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையம், காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் பொன். கெளதமசிகாமணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு லேசான அறிகுறிகளுடைய நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மையத்திலுள்ள வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து கள்ளக்குறிச்சி தொகுதி திமுக மக்களவை உறுப்பினா் பொன்.கெளதமசிகாமணி ஆய்வு செய்தாா்.
மருத்துவ அலுவலா் ராதிகா, மருத்துவப் பணியாளா்களின் சேவைகளை அவா் பாராட்டினாா். வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் சக்கரவா்த்தி, திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.