சங்ககிரி வருவாய் உள்கோட்டம் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவுநாளையொட்டி கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைமையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை வருவாய்த் துறையினா், பிற துறை அரசு அலுவலா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி திறந்த வெளியில் ஏற்றனா்.
இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், வட்டார வளக் கல்வி அலுவலா்கள் நெடுமாறன், செந்தில்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் உள்ளிட்ட பலா் லந்து கொண்டனா்.