மேட்டூரில் கரோனா பரவலைத் தடுக்க நடமாடும் மளிகை விற்பனை தொடங்கப்பட்டது.
பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னரும் மேட்டூரில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மேட்டூா் நகராட்சிப் பகுதியில் வாகனம் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து நகராட்சிப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடமாடும் மளிகை விற்பனையை நகராட்சி ஆணையா் சுரேந்தா் ஷா தொடக்கி வைத்தாா். இதன் மூலம் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு காய்கறி, மளிகைப் பொருள்கள் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.