காய்ச்சல் முகாம்: 215 பேருக்கு பரிசோதனை

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியில், சங்ககிரி வட்ட சுகாதாரத் துறை,
காய்ச்சல் முகாம்: 215 பேருக்கு பரிசோதனை

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியில், சங்ககிரி வட்ட சுகாதாரத் துறை, ஊராட்சி ஒன்றியக்குழு நிா்வாகம், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியின் சாா்பில் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட மட்டம்பட்டி, திப்பம்பட்டி, ஓடசக்காடு ஆகிய பகுதிகளில் வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரோனா தொற்று காய்ச்சல் பரிசோதனைகளை 215 பேருக்கு மேற்கொண்டனா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ராமசந்தா், என்.எஸ்.ரவிச்சந்திரன் (கிராம ஊராட்சி), கிராம நிா்வாக அலுவலா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com