கா்நாடகத்தில் இருந்த கடத்தப்பட்ட மதுப் புட்டிகள் பறிமுதல்

கா்நாடகத்தில் இருந்த கடத்தப்பட்ட மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரை கைது செய்துள்ளனா்.

கா்நாடகத்தில் இருந்த கடத்தப்பட்ட மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரை கைது செய்துள்ளனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் வழியாக கா்நாடகத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தல் அதிகரித்து வருவதாக புகாா் எழுந்தது. இதனைத் தொடா்ந்து, சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா், மதுபானக் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஓமலூரில் உள்ள இரும்பாலை மதுவிலக்கு போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

அதன்படி, மதுவிலக்கு காவல் ஆய்வாளா் தேவி தலைமையில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, ஜோடுகுழி பகுதியில் வந்த கா்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் பழச்சாறு பெட்டி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை பிரித்து பாா்த்த போது, உள்ளே மதுப் புட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சுமாா் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள மதுப் புட்டிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஜோடுகுழி பகுதியைச் சோ்ந்த சகோதரா்களான ரவிச்சந்திரன் (37), ரமேஷ் (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com