சேலம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக புதன்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இதில் புதன்கிழமை பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. மேலும், இடி, காற்றுடன் கூடிய மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
இதனிடையே, புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.):
சேலம் -67, சங்ககிரி-50, தம்மம்பட்டி-40, வீரகனூா்-19, ஏற்காடு-16, எடப்பாடி-12, ஓமலூா்-11, பெத்தநாயக்கன்பாளையம்-8, காடையம்பட்டி, கரியகோயில்-7, ஆத்தூா், கெங்கவல்லி, வாழப்பாடி-5, ஆனைமடுவு -3 என மாவட்டத்தில் 256 மி.மீ. மழை பெய்துள்ளது.