தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி: விவசாயிகள் முற்றுகை

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்கக் கோரி, விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்கக் கோரி, விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், அரங்கனூரில் உள்ளது செம்மனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். இந்த சங்கத்தில் அரங்கனூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் பணியாளா்கள் பணிக்கு வராமலேயே வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்வாா்களாம்.

இதேபோல நகைக் கடன் மற்றும் பயிா்க் கடன்களிலும் குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டும் கொடுப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு புகாா் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

தொடா்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இழப்பு ஏற்படுவதால் புதன்கிழமை அப்பகுதி விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப்படுத்த முயன்ற அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கூட்டுறவு சங்கச் செயலா் உயா் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னா் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com