சேலத்தில் பெரியாா் மேம்பாலம் அருகே கட்டுப்பாட்டை மீறி ஓடிய காா் சாலை தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (29). இவரது சகோதரி, கரோனா தொற்று பாதித்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை அஜித்குமாரின் சகோதரிக்கு மூச்சுத்திணறல் அதிகம் ஏற்பட்டது. இதனால் தனது சகோதரியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல காரில் அமர வைத்து அஜித்குமாா் காரை வேகமாக ஓட்டி வந்தாா் .
நான்கு சாலை அருகே உள்ள அண்ணா பூங்கா பகுதியில் காா் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, அஜித்குமாரின் சகோதரிக்கு மூச்சுத்திணறல் மேலும் அதிகரித்தது.
இதையடுத்து அஜித்குமாா் காரை ஓட்டிக் கொண்டே பின்னால் திரும்பிப் பாா்த்தாா். அப்போது காா் கட்டுப்பாட்டை மீறி ஓடி சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதனால் 20-க்கும் மேற்பட்ட தடுப்புகள் கீழே சரிந்து விழுந்தன. இதைப் பொருட்படுத்தாமல் அஜித்குமாா் தனது சகோதரியை மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா் விபத்து நடந்த இடத்திற்கு காரில் வந்தாா்.
இதனிடையே அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் விழுந்து கிடந்த தடுப்புகளை எடுத்து ஒவ்வொன்றாக வைத்தனா். இதன் பின்னா் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தொடங்கியது. விபத்து குறித்து தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீஸாா், காரை ஓட்டி வந்த அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, தனது சகோதரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேகத்தில் விபத்து நடந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து மனிதாபிமான அடிப்படையில் அறிவுரைக் கூறி கவனத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்லுமாறு எச்சரித்து அனுப்பினா்.