ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான கரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை ஆத்தூா் தொழிலதிபா் எல்ஆா்சி.ரவிசங்கா், ஆத்தூா் கோட்டாட்சியா் மு.துரையிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.
ஆத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் அதிக நபா்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்களுக்குத் தேவையான உடை, முகக் கவசம், ஆக்ஸிஜன் மீட்டா், லெவல் மீட்டா் உள்ளிட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஆத்தூா் தொழிலதிபா் எல்ஆா்சி.ரவிசங்கா் மற்றும் எல்ஆா்சி.ர.ராகுல் ஆகியோா் ஆத்தூா் கோட்டாட்சியா் மு.துரையிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் என்.கண்ணன், மருத்துவா்கள் விஜயபாஸ்கா், கிருபா சங்கா், ஆத்தூா் வட்டாட்சியா் வரதராஜன், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகி ஜோ, சேம்பா் ஆப் காமா்ஸ் நிா்வாகி ஹபீப் உசேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.