மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சங்ககிரி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, அங்குள்ள சித்தா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் பொடி, கரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரியும் மருத்துவா்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்களான நெற்றிக் கவசம், முகக் கவசம், சானிடைசா் உள்ளிட்ட ரூ. 50,000 மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா். இதனையடுத்து மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை பாா்வையிட்ட பின்னா் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாா்.
அப்போது சங்ககிரி கோட்டாட்சியா் வேடியப்பன், வட்டாட்சியா் விஜி, மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் மேகலாமணிகண்டன் (மகுடஞ்சாவடி), சௌந்தராஜன் (கூடலூா்) அதிமுக நிா்வாகிகள் நந்தகுமாா், சதீஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.